வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Friday, June 1, 2012

நட்பே...அன்பே...



         


அன்பே அன்பை அப்படியே அன்பாக விடு.அதற்கு ஒரு பெயரிட வேண்டாமே. அன்பிற்கு பெயர் வைக்கும்போது அது உறவுமுறையாகிறது. உறவு முறை அன்பை கட்டுப்படுத்தும். எனவே , அன்பிற்கு எல்லை போட வேண்டாம்.

அன்பு மூன்று வகைப்படும். 

1. கவர்ச்சியால் வரும் அன்பு
2. நெருங்கிப் பழகுவதால் வரும் அன்பு
3. தெய்வீக அன்பு

முதலாவது நிலைத்து நிற்காது. இந்த வகை அன்பில் கவர்ச்சி விரைவில் குறைந்து, பழகிய பின் சலிப்பு தோன்றத் துவங்கி விடும்.

நெருங்கிப் பழகுவதால் வரும் அன்பு வளருகிறது, பழக்கத்தாலும் அன்பு வளர்கிறது. புதியவரை விட பழைய நண்பருடன் பழகுவது எளிதாகிறது. ஆனால் அந்த அன்பில் ஆச்சரியமோ , உற்சாகமோ, உயிரோ இருக்காது.

தெய்வீக அன்பு உயர்ந்தது. புதிதாகவும், பழகப்பழக அதிக ஈர்ப்புடனும் ஆழ்ந்த அனுபவத்தை தருவதாகவும் இருக்கும். இது ஆகாயம் போன்றது. எல்லையற்றது.

குறிப்பு: இக்கருத்துக்கள் எங்கோ படித்தது.


No comments:

Post a Comment