வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Sunday, July 8, 2012

NOKIA MOBILE INFORMATION CODES


Code
Action
*#73#
Use to reset  game scores and phone timers
*#06#
To display the IMEI Number of the mobile
*#43#
To verify the call waiting status
*#147#
FOR Vodafone this code will help you show the last call detail
*#bta0#
Use to display Bluetooth MAC address
*#2820#
To verify the Bluetooth information
*#2640#
To display the mobile security code
*#7780#
To restore the factory settings of mobile set
*#3283#
To verify the set Manufacturing date
*#0000#
Use to display the mobile software version
*#7760#
To display the Production serial number
*#9999#
Use to display the mobile software version
*#7370#
To format the mobile phone memory
*#delset#
To delete the GPRS AND EMAIL settings
*#92702689#
To display the mobile warranty related settings
*#67705646#
Use to delete the operator logo
*#746025625#
To stop the sim clock
#pw+1234567890+1#
To display the lock status of mobile set
#pw+1234567890+4#
To display the lock status of your SIM
*#7328748263373738#
Apply to resets the set default security code


Saturday, July 7, 2012

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…




உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

இளநீரை வெறும் வயித்துல குடிக்காதீங்க..!!!

வணக்கம் நட்பே!!


இளநீரை வெறும் வயித்துல குடிக்காதீங்க..!!!

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்ற வழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால் .உண்மையில் அப்படி சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட நினைப்பது 100% தவறு. சொன்னஆச்சரியப்படுவீங்க, இளநீரை சாப்பிட்டால்கூட ஃபுட் பாய்ஸன் ஆகுமாம். மேலும் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையும் அதிகம் இருக்கிறது. அது எப்படியென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

உதாரணமாக ஒரு சூடான மண் பாத்திரத்தில் தண்ணீரை விடும் போது, உடனே அது வெடித்து விரிசல் விடும் அல்லவா... அது போல தான் நம் வயிறும் அந்த தன்மையை உடையது. இரவில் தூங்கி காலையில் எழும் போது வயிறு சற்று சூடாக, எரிச்சலாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அப்படி இருக்கும் போது அதிக குளிர்ச்சியை உடைய இளநீரை குடிக்கும் போது, சில நேரங்களில் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வெடிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

மேலும் இளநீரில் குளுக்கோஸ், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. அதை குடிக்கும் போது அவற்றை செரிமானப்படுத்த கிட்னி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சில சமயங்களில் அந்த கிட்னியால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடும், அதனாலும் உடலுக்கு பாதிப்புகள் வரலாம்.

வெறும் வயிற்றில் இளநீரை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் ஆவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே உணவு இடைவேளையில் இளநீரை சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.

அதேப்போல் இளநீரை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். அதை விட்டு பாத்திரங்களில், பாட்டில்பளில் ஸ்டாக் வைத்து சாப்பிடுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. மேலும் கடைகளில் இருந்து இளநீரை வாங்கும் போது, இளநீரானது நன்கு ஃப்ரஷ்ஷாக இருந்தால் மட்டும் வாங்கி சாப்பிட வேண்டும். 






இளநீரானது பறித்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இருந்த மாதிரி காய்ந்து போய் தோன்றினால், அதை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் அதனாலும் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும். இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனால் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்....

Tuesday, July 3, 2012

விட்டு விலகாதது!




அலெக்ஸாண்டர் இரக்க குணம் மிகுந்தவர்..      . தன்னிடம் உள்ள செல்வங்களை அனைவருக்கும் வாரி வழங்கினார்


நிலம், பொருள், பதவிகள் என்று அவர் வாரி வாரி வழங்கியதைக் கண்ட நண்பர் ஒருவர், ''உங்களிடம் இருப்பதையெல்லாம் இப்படிக் கொடுத்துவிட்டால், உங்களுக்கென எதுவும் இருக்காதே?'' என்று அக்கறை மேலிட கேட்டார். 

நண்பனைப் பார்த்துப் புன்னகைத்த அலெக்ஸாண்டர்

''நான் எல்லாவற்றையும் கொடுத்தாலும் மாபெரும் சொத்து ஒன்று என்னிடம் அப்படியே இருக்கும். அது... எனது தன்னம்பிக்கை!''என்றார்.

இதைக் கேட்ட நண்பர், மாவீரனான தன் நண்பனை எண்ணி பெருமிதம் பொங்க ஆரத் தழுவிக் கொண்டார். 

ரகசிய குறியீடு!!!!!
































ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது ( Barcode Scanner ) !!!!


நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கின்றோம்.
பெரும்பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள் எதற்க்காக அச்சிடப்பட்டுள்ளது என்றும் அந்த ரகசியக்குறியீட்டினுள் அப்படி என்னதான் இருக்கிறது என்றும் தெரிவதில்லை. இந்த ரகசியக்குறியீடுகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் முழுமையாக ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

விற்பனைப் பொதிகளில் அச்சிடப்படும் இந்த ரகசியக்குறியீடுகள் ஆங்கிலத்தில் Barcodes என அழைக்கப்படும். Barcode என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல்களைக் காண்பிக்கும் ஒரு குறியீடாகும்.இவ் Barcodes இனுள்ளே அது அச்சிடப்பட்டுள்ள உரிய பொருளிற்கான விலை, உற்பத்தி தேதி , காலாவதி தேதி , அப்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணையமுகவரி போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.இவற்றை நம் வெறும் கண்ணினால் பார்த்து அறிய முடியாது.இவற்றை Barcode Scanner கள் மூலமாகவே வாசித்து அறிய முடியும்.

இந்த ரகசியக்குறியீட்டினை Barcode Scanner இற்கு முன்பாக பிடித்தால் போதும், இரகசியக்குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும் இரகசிய விடயங்கள் அனைத்தையும் அறிந்துவிடலாம்.
ஆனால் தற்போது Barcode Scanner களைப் போலவே கையடக்கத் தொலைபேசிகளும் இந்த இரகசியக்குறியீடுகளை இனங்கண்டுகொள்ள பெரிதும் உதவுகின்றன.

குறித்த இரகசியக் குறியீட்டினை கையடக்கத் தொலைபேசியின் கமராவினால் Scan செய்து அதனுள் மறைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் அறிந்துவிடலாம்.இதற்காகவே பெரும்பாலான கையடக்கத் தொலைபேசிகளில் (Smart Phones) இவ் Barcode களை வாசிப்பதற்க்குரிய மென்பொருள் காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.மேலும் கையடக்கத் தொலைபேசியில் இவ்மென்பொருள் இல்லையென்றால் இணையத்திலிருந்து இலவசமாக Download செய்து நிறுவிக்கொள்ளலாம்.

இரகசியக் குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம், அடுத்ததாக பார்க்கபோகும் விடயம் அனைவரிற்கும் நிச்சயமாகப் பிடிக்கும்.எமது அடிப்படை விபரங்களை (பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மேலும் பலவற்றை) புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக் குறியீட்டினை உருவாக்கிக்கொள்ளலாம்.

Barcodes பல வகைப்படும், அவற்றுள் QR Code என்ற Barcode வகையே பாவனைக்கு இலகுவானதாகும்.
எனவே “QR Code Generator” என Google இல் Type செய்து தேடினால் இவ் Barcode இனை இலவசமாக உருவாக்கித்தருகின்ற பல இணையதளங்கள் உங்கள் முன் தோன்றும்.

அவற்றில் ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று உங்கள் இரகசியக் குறியீட்டினுள் நீங்கள் உள்ளடக்க விரும்பும் விடயங்களை வழங்கினால் போதும், உடனே உங்களிற்குரிய இரகசியக் குறியீடு தயாராகிவிடும், அதனை நீங்கள் புகைப்படமாக Download செய்து அதனை அச்சிட்டு (Print எடுத்து) பெற்றுக்கொள்ளலாம்.

இவ் இரகசிய குறியீட்டினுள் அதிகபட்சமாக 250 சொற்கள் கொண்ட தகவல்களை உள்ளடக்க முடியும் என்பது பிரமிக்கத்தக்கவொரு விடயமாகும். இந்த Barcode 1948 இல் தான் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. Barcode ஆனது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

வைத்தியசாலையில் நோயாளிகளின் மணிக்கட்டுப் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் Barcode இன் மூலம் குறித்த நோயாளியின் முழுத்தகவல்களையும் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களினால் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

வாடகை கார்கள், விமானப் பயணப்பெட்டி, அணுக்கருக் கழிவு, அஞ்சல் மற்றும் பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்களின் நகர்வைக் கண்காணிப்பதிலும் பயன்படுகிறது.

Source: FaceBook